Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

ஏப்ரல் 25, 2024 05:49

ராசிபுரம், ஏப் 25 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசக்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா சிறப்பாக  நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் சுவாமிக்கு  பல்வேறு கட்டளைதாரர்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
ராசிபுரம் ஸ்ரீ கௌரவ பலிஜா நாயுடு சங்கத்தின் சார்பாக ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் சமேத ஸ்ரீதேவி பூதேவி அம்பாளுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். மேலும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
மாலையில்  நாயுடுகள் சமூகத்தின் சார்பாக சுவாமி திருவீதி உலாவும் முக்கிய வீதி வழியாக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்க் மணி, சிட்டி (எ) வரதராஜன், இபி மனோகரன்,ஆட்டோ சீனிவாசன்,ஏடிசி சக்திவேல், ஸ்ரீ ராமுலு  ஆர் முரளி, பிரபாகரன்,வினோத் (எ) பாலகிருஷ்ணன், ராஜா(எ) யோகராஜன், தரணி  பாபு, மற்றும் ரமணி, பிரேமலதா, ஜெயலட்சுமி, ஜனார்த்தனன் ஜோதி, ஜமுனா, யசோதா, நாராயணி, மற்றும் நாயுடு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்